என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள்
Byமாலை மலர்29 Jun 2019 5:23 AM GMT (Updated: 29 Jun 2019 5:23 AM GMT)
சிகரெட் பிடிப்பதனை நிறுத்துவதற்கு பழக்கப்பட்ட பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கின்றது. சிகரெட், புகையிலை நிறுத்திய 10 வருடத்தில் தொண்டை, வாய், கணைய புற்றுநோய் பாதிப்பு வாய்ப்புகள் 50 சதவீதம் குறைகின்றன.
சிகரெட் பிடிப்பதனை நிறுத்துவதற்கு பழக்கப்பட்ட பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கின்றது. ஆனால், உறுதியாய் முழு மனதாய் இதனை தைரியமாய் செய்யும் அநேகருக்கு...
* உடல் சக்தி கூடுகிறது.
* வாசனை, சுவை இவற்றினை நன்கு அறிய முடிந்தது.
* சரும நிறம் கூடியது.
* சுய மரியாதையும், சுய நம்பிக்கையும் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் மருத்துவ ரீதியாக
* சிகரெட்டை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே நாடித்துடிப்பு சீராகின்றது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீர்படுகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் நிகோடின் அளவு 90 சதவீதம் குறைகிறது.
* 24 மணி நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.
* இருதய பாதிப்பு அபாயம் குறையத் தொடங்குகின்றது.
* 48 மணி நேரத்தில் சுவை, வாசனை இவற்றினை நன்கு உணர முடிகிறது.
* 5-10 நாட்களில் புகை பிடிக்க வேண்டும் என்ற வெறி வெகுவாய் குறைகிறது.
* 72 மணி நேரத்தில் நுரையீரல் எளிதாய் சுவாசிக்கிறது.
* 2-12 வாரங்களில் இருமல், மூச்சு வாங்குதல் வெகுவாய் குறைகின்றது.
மூன்று முதல் ஒன்பது மாதங்களில்
* மூக்கடைப்பு
* சோர்வு
* சைனஸ்
* மூச்சு வாங்குதல்
* சுவாச மண்டல தாக்குதல்கள் மறைந்தே போகின்றன
ஐந்து வருடங்களில்
* பக்க வாத அபாயம் வெகுவாய் குறைகின்றது.
* உடல் தன்னைத்தானே ஆற்றிக்கொண்டு ரத்த குழாய்கள் சீராய் செயல்பட தொடங்குகின்றன.
ஒரு வருடத்திலேயே சளியினை வெளி தள்ளும் சக்தியினை நுரையீரல் பெறுகின்றது.
சிகரெட், புகையிலை நிறுத்திய 10 வருடத்தில் தொண்டை, வாய், கணைய புற்றுநோய் பாதிப்பு வாய்ப்புகள் 50 சதவீதம் குறைகின்றன.
15 வருடத்தில் இருதய நோய் பாதிப்புகள் குறைகின்றன.
இருபது வருடத்தில் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகின்றன.
* உடல் சக்தி கூடுகிறது.
* வாசனை, சுவை இவற்றினை நன்கு அறிய முடிந்தது.
* சரும நிறம் கூடியது.
* சுய மரியாதையும், சுய நம்பிக்கையும் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் மருத்துவ ரீதியாக
* சிகரெட்டை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே நாடித்துடிப்பு சீராகின்றது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீர்படுகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் நிகோடின் அளவு 90 சதவீதம் குறைகிறது.
* 24 மணி நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.
* இருதய பாதிப்பு அபாயம் குறையத் தொடங்குகின்றது.
* 48 மணி நேரத்தில் சுவை, வாசனை இவற்றினை நன்கு உணர முடிகிறது.
* 5-10 நாட்களில் புகை பிடிக்க வேண்டும் என்ற வெறி வெகுவாய் குறைகிறது.
* 72 மணி நேரத்தில் நுரையீரல் எளிதாய் சுவாசிக்கிறது.
* 2-12 வாரங்களில் இருமல், மூச்சு வாங்குதல் வெகுவாய் குறைகின்றது.
* உடல் செயல்பாடுகள் எளிதாகின்றது.
மூன்று முதல் ஒன்பது மாதங்களில்
* மூக்கடைப்பு
* சோர்வு
* சைனஸ்
* மூச்சு வாங்குதல்
* சுவாச மண்டல தாக்குதல்கள் மறைந்தே போகின்றன
ஐந்து வருடங்களில்
* பக்க வாத அபாயம் வெகுவாய் குறைகின்றது.
* உடல் தன்னைத்தானே ஆற்றிக்கொண்டு ரத்த குழாய்கள் சீராய் செயல்பட தொடங்குகின்றன.
ஒரு வருடத்திலேயே சளியினை வெளி தள்ளும் சக்தியினை நுரையீரல் பெறுகின்றது.
சிகரெட், புகையிலை நிறுத்திய 10 வருடத்தில் தொண்டை, வாய், கணைய புற்றுநோய் பாதிப்பு வாய்ப்புகள் 50 சதவீதம் குறைகின்றன.
15 வருடத்தில் இருதய நோய் பாதிப்புகள் குறைகின்றன.
இருபது வருடத்தில் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X