search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடலுக்குப் புத்துணா்ச்சி தரும் பத்ம உஜ்ஜயி
    X

    உடலுக்குப் புத்துணா்ச்சி தரும் பத்ம உஜ்ஜயி

    • எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும்.
    • பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும்.

    செய்முறை :

    பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி, கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து, வாயை மூடி மூச்சை சத்தமாக வெளியே தள்ளவும். 10 அல்லது 15 முறை செய்யவும். வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

    பத்ம உஜ்ஜையில் மூச்சைத் தள்ளும்போது நுரையீரலுக்கு அதிக காற்று உட்செல்கிறது. இதன்மூலம் உடல் புத்துணா்ச்சி பெறுகின்றது. பந்து அடிவயிற்றிலிருந்து கிளம்பி மூக்கு வழியாக வருவதுபோல் நினைத்து காற்றை வெளியே வேகமாகத் தள்ளவும்.

    பலன்கள் :

    ஆஸ்துமா, சைனஸ் தொல்லைகள், ஒருபக்கத் தலைவலி, கண்பார்வை கோளாறுகள், காது நோய் முதலியவை அகலும். உடலுக்குப் புத்துணா்ச்சி உண்டாகி, சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும். இதய பலவீனம் அகன்று பலமாகும். பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும். முடி வளரும்.

    Next Story
    ×