search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தியானம் ஏன் பயன்படுகிறது?
    X

    தியானம் ஏன் பயன்படுகிறது?

    • சீரான வழக்கமாக மேற்கொள்ளும் தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
    • தியானம் ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கிறது.

    "மனம் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும்போது, ​​தியானம் நிகழ்கின்றது. தியானம் செய்வதன் மூலம், உங்கள் உடலை ஒரு ஆற்றல் மூலமாக உருவாக்குவதன் மூலம் உங்கள் உடலை ஒரு சக்தி நிறைந்த ஆற்றல்மய்யமாக மாற்ற முடியும். "

    ~ குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

    1. தியான நிலை ஆழமாக இருக்கும்போது, ​​ தியானம் முடிந்த பின்னரும் தியானத்தின் விளைவு சில நிமிடங்களுக்கு தொடர்கிறது.

    2. உடல் நிதானமாக இருந்தாலும் மனம் எச்சரிக்கையாக இருக்கிறது. இது முழுமையான ஓய்வு அளிக்கிறது.

    3. தியானம் ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கிறது.

    4. உடலில் ஆக்ஸிஜன் நுகர்வு வீதம் குறைகிறது. ஆகையால், உடலியல் ரீதியாக ஒருவர் ஆறு அல்லது எட்டு மணிநேர தூக்கத்திலிருந்து பெறுவதை விட அந்த சில தியான நிமிஷங்களில் ஆழமாக ஓய்வு பெறுகிறார். இருப்பினும், தியானம் தூக்கத்திற்கு மாற்றானது அல்ல.

    5. சீரான வழக்கமாக மேற்கொள்ளும் தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மனம் எச்சரிக்கையாக இருக்கிறது, புத்தி கூர்மையாகிறது. நல்ல ஆரோக்கியமும் நிதானமான மனமும் இயல்பாகவே உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும்.

    Next Story
    ×