
பலன்கள்: உடலில் உள்ள அதிக உஷ்ணம் நீங்கும். வயிற்றுப்புண்கள், அல்சர், வாய் புண்கள், நாக்கு புண்கள் வராது. தலைவலி வராது. மூளை சூடு தணியும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். ரத்த அழுத்தம் வராமல் வாழலாம். நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
பொறுமையாக தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் ஆன்மாவுடன் இணைந்து ஆத்ம சக்தியை உணர்ந்து வாழ வழிவகை செய்கின்றது.
உணவில் ஒழுக்கம், உடலுக்குரிய ஓய்வு, எண்ணங்களை சரி செய்து விழிப்புடன் நல்ல எண்ணங்களை மட்டும் பின்பற்றி வாழ்தல், முத்திரை, தியானம், மூச்சு பயிற்சி செய்யுங்கள். தனிமனித ஒழுக்கத்தை வாழ்வில் கடைபிடியுங்கள், வாழ்க்கை இன்பமாகவே அமையும், துன்பமின்றி வாழலாம்.
நமது உடல், மன இன்ப துன்பத்திற்கு நாமே முழு காரணமாவோம். எண்ணம், சொல், செயலால் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால், நன்மையை செய்வதாக இருந்தால் நமக்கு நன்மையே நடக்கும். வாழ்வில் இன்பமே இருக்கும்.
யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com