search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    நீரிழிவு நோய், உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி

    உங்களுக்கு தேவையான மற்றும் முற்றிலும் புதிதான நான்கு வகை உடற்பயிற்சிகள் இதோ... இதனை முயற்சி செய்து பாருங்கள் அழகான, கட்டான உடலை பெறுங்கள்..
    இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற கொடிய நோய்களில் இருந்து போராடி வெற்றியை காணலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதால் இரத்த கொதிப்பின் அளவை சீராக வைக்கலாம். இந்தியாவில் 50 சதவித மக்கள் நீரிழிவு நோய்க்கு தள்ளப்படுகின்றனர். 

    இதனால் உலக சுகாதாரத் துறை, உடற்பயிற்சி செய்வதால் நம் உடலை ஆரோக்கியமாகவும் மற்றும் நீரிழிவு நோய்க்கு முற்றுபுள்ளி வைக்கலாம் எனவும் கூறுகின்றனர். தினமும் 30 நிமிடத்திற்கு உடல்ரீதியாக பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமான உடலுக்கு நாமே சொந்தக்காரர்கள்!! “உடலின்றி உயிர் இல்லை” என்ற வரிகளுக்கு இணங்க உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவ்வுடலில் உயிர் நிலைக்காது என்பது தான் உலக நீதி..இதனை மாற்ற யாராலும் இயலாது. உங்களுக்கு தேவையான மற்றும் முற்றிலும் புதிதான நான்கு வகை உடற்பயிற்சிகள் இதோ... இதனை முயற்சி செய்து பாருங்கள் அழகான, கட்டான உடல் வளைவை பெறுங்கள்.. 

    நடனமாடுவது,எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.தினமும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் உங்களுக்கு பிடித்தமான பாடலிற்கு நடனமாடுவது என்பது ஒரு வித உடற்பயிற்சி ஆகும்.அவ்வாறு நடனமாடுவது மூலம் நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக்க உதவுகிறது.சிலர்,நடனமாடுவதால் மனதில் ஏற்படுகின்ற தேவையற்ற குழப்பங்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவார்கள்.இதனை ஒரு பொழுது போக்கும் விதமாகவும் செயல் படுத்தி வருகின்றனர்.வாரத்தில் ஐந்து நாட்கள் இவ் உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.. 

    நடைபயிற்சி மிக எளிய வகையான உடற்பயிற்சி ஆகும்.இதற்காக நீங்கள் தனி நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அல்லது மாலை நேர வெயிலில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.2014,ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி நடைபயிற்சி செய்வதால் நீரிழிவு நோயின் இரண்டாவது பிரிவையும் மற்றும் உடல் எடையும் குறைக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுயுள்ளனர்..

    பளு தூக்குதல் மூலம் தசைகள் யாவும் வலிமைபெருகின்றது.வீட்டில் கிடைக்கின்ற கனமான பொருட்கள் அல்லது (dumbbells)பிரடையை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தலாம்.தினமும் பளு தூக்குதல் செய்து வந்தால் உடலில் ஆரோக்கியம் வலிமை பெரும்.. 

    யோகா உடற்பயிற்சி, சுமார் 500 வருட பாரம்பரிய உடற்பயிற்சி ஆகும்.யோகா என்பது மனரீதியான உடற்பயிற்சி எனவும் கூறலாம்.ஏனென்றால் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடிவு பெறலாம்.அது மட்டும் இல்லாமல் தசைகளும் வலிமை பெறுகிறது.. 
    Next Story
    ×