என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மனஅழுத்தம், தலைவலியை குணமாக்கும் ஆசனம்
Byமாலை மலர்29 May 2020 5:01 AM GMT (Updated: 29 May 2020 5:01 AM GMT)
உத்தனாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல் மயக்கம் குறைகிறது.
செய்முறை
கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.
நன்மைகள்
மூளைப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. சிறுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால் கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன. தொடை இடுப்பு தசைகள் வலுவடைகின்றன.
செரிமானம் தூண்டப்படுகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல் மயக்கம் குறைகிறது. அமைதியான தூக்கம் பெறலாம். ஆஸ்துமா உயர் இரத்த அழுத்தம் மலட்டுத்தன்மை மூட்டுவலி மற்றும் சைனஸ் நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.
நன்மைகள்
மூளைப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. சிறுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால் கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன. தொடை இடுப்பு தசைகள் வலுவடைகின்றன.
செரிமானம் தூண்டப்படுகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல் மயக்கம் குறைகிறது. அமைதியான தூக்கம் பெறலாம். ஆஸ்துமா உயர் இரத்த அழுத்தம் மலட்டுத்தன்மை மூட்டுவலி மற்றும் சைனஸ் நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X