search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தியானம்
    X
    தியானம்

    தினமும் தியானம் செய்வோம்... மனதை மேம்படுத்துவோம்...

    தியானம் என்பது எமது மனதை மேம்படுத்தும் ஒரு செயற்பாடாகும். எமது மனதை ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்க வைப்பதனை தியானம் எனக்கூறலாம்.
    தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேழும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்வதற்கான விசேஷ முறையாகும்.

    தியானம் என்பது எமது மனதை மேம்படுத்தும் ஒரு செயற்பாடாகும். எமது மனதை ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்க வைப்பதனை தியானம் எனக்கூறலாம். ஓழுங்கு முறையாக மனதினை செயற்படுத்துவதினால் அக வாழ்வு தூய்மைபெறும். அகவாழ்வு தூய்மைபெறுவதால் உங்களது வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக  சுகமானதாக மாறும். நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக  தைரியம் கொண்டவராவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் கொண்டவராவீர்கள். சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்வீர்கள். மனதை மேன்மை படுத்துவதால் இவ்வனைத்தையும் உங்களால் பெற முடியும்.

    நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் மரணத்தையே நெருங்குகிறோம். ஆனால் நாம் எமது மனதினை மேன்மைபடுத்த இதுவரை முயன்றிருக்கிறோமா? இல்லை. மனதை மேன்மை படுத்த முயலாமை என்பது எமது வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டமாகும். இந்த நஷ்டத்திலிருந்து நீங்கி மனதினை மேன்மை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    நீங்கள் இப்போது மனித உலகில் பிறந்திருக்கிறீர்கள். அத்தோடு நன்றாக சிந்திக்கும் ஆற்றலும் இருக்கிறது. இந்த சிந்திக்கும் ஆற்றலை நீங்கள் மென்மேழும் வளர்த்து கொள்ள வேண்டும். ஒருவர் தியானம் செய்வதற்கு, சீலம் போன்ற குணநலன்களை வளர்த்து கொள்வதற்கு, மனதை மேன்மை படுத்தி கொள்வதற்கு முயற்சி செய்யும் போது அது மிகவும் கடினமானதாகவே தோன்றும். நீங்கள் எதிர்பாராத வண்ணம் ஆரம்பித்த இடத்திலேயே இருப்பீர்கள். இதனை நன்கு உணர்ந்து கொண்டு ‘நான் கற்கும் இந்த தர்மத்தினை என் வாழ்வோடு ஒருங்கிணைத்து என் மனதை மேன்மை படுத்துவேன்’ என்று ஒரு திடமான இலட்சியத்தை மனதில் உருவாக்கிகொள்ளுங்கள்.

    மனம் விருத்தியடைவதன் மிக விசேடமான பிரதிபலன்தான் குணநலன்களின் விருத்தி. உங்கள் மனம் மேன்மையடையும் போது உங்களுள்ளே சிறந்த ஆளுமையொன்று உருவாகும். ஆளுமை விருத்தியடைவதால் நீங்கள் அபிமானமிக்கவராக மாறுவீர்கள். உங்களுல் தோன்றிய சிறந்த ஆளுமையினால் நீங்கள் மென்மேழும் மேன்மையடைவீர்களே தவிர கீழ்தரமான நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். நீங்கள் இன்னுமொருவர் மீது பொறாமையடைய மாட்டீர்கள். அதனால் நீங்கள் இன்னுமொருவர் மீது கோபம் கொள்ளவோ பொறாமையடையவோ மாட்டீர்கள். ஏனையோரின் முன்னேற்றத்தை கண்டு மனங்கலங்க மாட்டீர்கள் மாறாக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த இயல்புகள் தான் உங்கள் மனவிருத்தியின் அறிகுறிகள்.

    புத்த பகவான், ஒருவரது இரு வாழ்வுகளும் அதாவது இவ்வுலக வாழ்வு  மற்றும் மறுவுலக வாழ்வு எனும் ஈருலோக வாழ்வின் நன்மைக்கும் துணை செய்யும் மூன்று முறைகளை மொழிந்துள்ளார். அவையாவன முறையே, தானம், சீலம் அதாவது ஒழுக்கம், மற்றும் தியானம் என்பனவாகும்.  இவற்றில் தியானம் என்பது மிகவும் புண்ணியம் சேரும் ஒரு செய்றபாடு என புத்த பகவான் மொழிந்துள்ளார்.  
    Next Story
    ×