என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முழங்கால் மூட்டுவலி குணமாக்கும் சோமாசனம்
Byமாலை மலர்28 March 2020 4:38 AM GMT (Updated: 28 March 2020 4:38 AM GMT)
சோமாசன பயிற்சியால் குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம்.
செய்முறை :
சோமசனம் என்பது ''பத்மாசனம்'' போலவே உட்காரவேண்டும். ஆனால் கைகள் இரண்டையும் மடிமீது வைத்தல் வேண்டும். ஒரு விரிப்பின் மீது இரண்டு காலையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி வலது தொடைமீது வைக்கவும்.
அதே போல் வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் மடியின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கவும். மூச்சை மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும்.
இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும். இரண்டு நிமிடம் இருந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக்கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும்.
அதாவது இடது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். அதன்பின் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும்.
இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக அமரவும். இதை திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரலாம்...
பலன்கள் :
''சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்'' என்று ஒரு பழமொழி உண்டு.... சோமாசன பயிற்சியால் சங்கடங்கள் அகலும். குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம். இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலு பெறுகின்றன.
சோமசனம் என்பது ''பத்மாசனம்'' போலவே உட்காரவேண்டும். ஆனால் கைகள் இரண்டையும் மடிமீது வைத்தல் வேண்டும். ஒரு விரிப்பின் மீது இரண்டு காலையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி வலது தொடைமீது வைக்கவும்.
அதே போல் வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் மடியின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கவும். மூச்சை மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும்.
இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும். இரண்டு நிமிடம் இருந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக்கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும்.
அதாவது இடது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். அதன்பின் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும்.
இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக அமரவும். இதை திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரலாம்...
பலன்கள் :
''சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்'' என்று ஒரு பழமொழி உண்டு.... சோமாசன பயிற்சியால் சங்கடங்கள் அகலும். குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம். இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலு பெறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X