என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்
Byமாலை மலர்17 March 2020 3:01 AM GMT (Updated: 17 March 2020 3:01 AM GMT)
`ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகளில் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, உடல் இயக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் `ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், தீவிர இதயநோய், பக்கவாதம், சர்க்கரை நோய், மனஅழுத்தம், மார்பகப் புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எலும்புகளின் வலிமை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். கூடுதல் ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு வாரத்துக்கு 300 நிமிடங்கள் மிதமாகவும், 150 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் தினமும் 60 நிமிடங்கள் செய்வது நல்லது. இப்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலப் பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம். இப்படிச் செய்வதன் மூலம் புகைப்பிடித்தல், மது, போதைப்பழக்கம் ஆகியவற்றில் சிக்காமல் இருக்க முடியும்' என்றும் உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், தீவிர இதயநோய், பக்கவாதம், சர்க்கரை நோய், மனஅழுத்தம், மார்பகப் புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எலும்புகளின் வலிமை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். கூடுதல் ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு வாரத்துக்கு 300 நிமிடங்கள் மிதமாகவும், 150 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் தினமும் 60 நிமிடங்கள் செய்வது நல்லது. இப்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலப் பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம். இப்படிச் செய்வதன் மூலம் புகைப்பிடித்தல், மது, போதைப்பழக்கம் ஆகியவற்றில் சிக்காமல் இருக்க முடியும்' என்றும் உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X