search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நௌகாசனம்
    X
    நௌகாசனம்

    சிறுநீரகம் சிறப்பாக இயங்கச் செய்யும் ஆசனம்

    இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது. நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது.
    செய்முறை

    * விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள்
    * இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடுங்கள்
    * மூச்சை இழுத்துக்கொண்டு கைகளையும், கால்களையும் உயர்த்துங்கள்.
    * இரு கைவிரல்களும் இரு கால் விரல்களை நோக்கி இருக்கட்டும். இந்நிலையில் மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும்.
    * பின் மூச்சை வெளிவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். இதுபோல் மூன்று முறைகள் காலை, மாலை செய்யுங்கள்.

    பயன்கள் :

    இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது. நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது.

    இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும். வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

    இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் உடலளவில் மட்டுமல்ல... மன அளவிலும் பல நன்மைகள் உண்டு. ஆழ்மன அச்சத்தை உடைத்து நமது ஆளுமைத்திறனை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஜீரண மற்றும் இனப்பெருக்க மண்டல உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கச் செய்கிறது.
    Next Story
    ×