என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இடுப்பு சதையை குறைக்கும் அர்த்தக்கட்டி சக்ராசனம்
Byமாலை மலர்18 Feb 2020 3:24 AM GMT (Updated: 18 Feb 2020 3:24 AM GMT)
இந்த ஆசனம் செய்து வந்தால் பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும்.
செய்முறை : விரிப்பின் மீது இருகால்களையும் ஒன்று சேர்த்து நிற்கவும். உங்கள் வலது கையை பக்கவாட்டில் உயர்த்தி, வலது காதுக்கு பக்கத்தில் ஒட்டியது போன்று நிறுத்தவும். இந்நிலையில் இடது பக்கவாட்டில் வளைந்து படத்தில் உள்ளபடி 15 முதல் இருபது எண்ணிக்கை செய்யவும். மூச்சை இழுத்துக் கொண்டே வளையவும். மூச்சை அடக்கி 15 முதல் 20 விநாடிகள் இருந்துவிட்டு பின்னர் மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.
பின்பு மாற்று ஆசனமாக இடது கையை உயர்த்தி செய்யவும். இப்படியாக வலப்பக்கம், இடப்பக்கம் மூன்று முறைகள் செய்யவும். பார்ப்பதற்கு எளிய ஆசனமாகத் தோன்றலாம். ஆனால் பலன்கள் ஏராளம்.
பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். கல்லீரல், உணவுப்பை நன்றாக இயங்கும். இடுப்பு வலி நீங்கும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். பசித்தால் மட்டும், உடல்மொழி அறிந்து உண்ணும் உணவில் முழுக்கவனம் வைத்து சாப்பிடுங்கள். பகலில் தூக்கம், இடைத்தீனி, எண்ணெய் பதார்த்தம் உண்பதை விடுங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.
பின்பு மாற்று ஆசனமாக இடது கையை உயர்த்தி செய்யவும். இப்படியாக வலப்பக்கம், இடப்பக்கம் மூன்று முறைகள் செய்யவும். பார்ப்பதற்கு எளிய ஆசனமாகத் தோன்றலாம். ஆனால் பலன்கள் ஏராளம்.
பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். கல்லீரல், உணவுப்பை நன்றாக இயங்கும். இடுப்பு வலி நீங்கும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். பசித்தால் மட்டும், உடல்மொழி அறிந்து உண்ணும் உணவில் முழுக்கவனம் வைத்து சாப்பிடுங்கள். பகலில் தூக்கம், இடைத்தீனி, எண்ணெய் பதார்த்தம் உண்பதை விடுங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X