என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஆசனம்
Byமாலை மலர்25 Jan 2020 3:41 AM GMT (Updated: 25 Jan 2020 3:41 AM GMT)
அர்த்த சிரசாசனம் மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.
விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். அதில் இருந்து எழுந்து உச்சந்தலை தரையில்படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்கலையும் கால் பெருவிரல்கள் தரையில்படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும். இந் நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.
பலன்கள்
பிட்யுட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.
இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
பலன்கள்
பிட்யுட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.
இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X