என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    ஜங் புட் உணவுகள் குழந்தைகளுக்கு என்னென்ன தீமைகளை உண்டாக்கும்..?
    X

    'ஜங் புட்' உணவுகள் குழந்தைகளுக்கு என்னென்ன தீமைகளை உண்டாக்கும்..?

    • அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
    • சில வகை ‘ஜங்’ உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது.

    'ஜங் புட்' பற்றியும், அவை குழந்தைகளுக்கு உண்டாக்கும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்வோமா..!

    * 'ஜங் புட்' எவை?

    உடல் இயக்கத்திற்கான மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது. குறிப்பாக ஆவியில் வேகவைத்தது தவிர, எண்ணெய்யில் பொரிப்பது, டின்களில் அடைத்து வைத்திருப்பது, பாக்கெட் உணவுகள், இனிப்பு சாக்லெட்டுகள் இவற்றுடன் அவசர கதியில் சமைக்கும் உணவுகள் போன்றவை எல்லாம் 'ஜங் புட்' உணவில்தான் வருகிறது. குறிப்பாக நூடுல்ஸ், பீட்சா, பிரைடு ரைஸ், நொடி பொழுதில் தயாராகும் அசைவ உணவுகள், சிப்ஸ் உணவுகள்... எல்லாம் ஜங் புட் ரகம்தான்.

    * ஜங் புட் உண்டாக்கும் விளைவுகள்

    'ஜங் புட்' களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதற்றம், உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறதாம். இந்த வகை உணவுகள் கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன. குறிப்பாக உடற்பருமனில் தொடங்கி, எல்லா வகையான வியாதிகளுக்கு வழிவகை செய்கின்றன.

    சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை 'ஜங்' உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது எனவும், மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.

    * பாக்கெட் உணவுகள்

    வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

    அதேபோல பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த மாதிரியான பாக்கெட் உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

    மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது.

    Next Story
    ×