என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்
Byமாலை மலர்11 July 2020 4:55 AM GMT (Updated: 11 July 2020 4:55 AM GMT)
‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.
பிறவியிலேயே உருவாகும் ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் ஸ்டெம் செல் சிகிச்சையால் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.
‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். குடல் சரியான முறையில் உணவை ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு கடத்த தேவையான நரம்புகள் சில இடங்களில் இல்லாமல் போவதே இந்நோய்க்கு காரணம். இந்தநோயை குணப்படுத்த இன்று வரை அறுவை சிகிச்சைதான் உதவி வருகிறது. ஆனால், அறுவை சிகிச்சையின்றி இதை குணப்படுத்த ஸ்டெம் செல் வழிமுறையால் முடியும் என்று தங்களின் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
மனித உடலில் பாதிக்கப்படாத பகுதியில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து பிறகு அவற்றை மீண்டும் குடல் திசுக்களில் செலுத்தி இந்த நோயை குணப்படுத்த முடியும். மேலை நாடுகளில் இந்த ஆய்வு விலங்குகளில் செய்யப்பட்ட போது ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.
ஸ்டெம் செல்களை பாலிமர் எனும் வேதிப்பொருளுடன் இணைத்து ‘சிந்தெடிக்ஸ்கபோல்ட்‘ எனும் ஆதரவு இணைப்புகளை குடல் திசுக்களில் செலுத்துவார்கள். இந்த உத்தி உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் இதை விலங்குகளில் செலுத்தி ஆய்வு செய்ய மருத்துவ நெறிகள் குழுவிடம் அனுமதி வேண்டி ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வரும்போது பிறவிக் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். குடல் சரியான முறையில் உணவை ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு கடத்த தேவையான நரம்புகள் சில இடங்களில் இல்லாமல் போவதே இந்நோய்க்கு காரணம். இந்தநோயை குணப்படுத்த இன்று வரை அறுவை சிகிச்சைதான் உதவி வருகிறது. ஆனால், அறுவை சிகிச்சையின்றி இதை குணப்படுத்த ஸ்டெம் செல் வழிமுறையால் முடியும் என்று தங்களின் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
மனித உடலில் பாதிக்கப்படாத பகுதியில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து பிறகு அவற்றை மீண்டும் குடல் திசுக்களில் செலுத்தி இந்த நோயை குணப்படுத்த முடியும். மேலை நாடுகளில் இந்த ஆய்வு விலங்குகளில் செய்யப்பட்ட போது ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.
ஸ்டெம் செல்களை பாலிமர் எனும் வேதிப்பொருளுடன் இணைத்து ‘சிந்தெடிக்ஸ்கபோல்ட்‘ எனும் ஆதரவு இணைப்புகளை குடல் திசுக்களில் செலுத்துவார்கள். இந்த உத்தி உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் இதை விலங்குகளில் செலுத்தி ஆய்வு செய்ய மருத்துவ நெறிகள் குழுவிடம் அனுமதி வேண்டி ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வரும்போது பிறவிக் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X