என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா?
Byமாலை மலர்21 Jan 2020 3:15 AM GMT (Updated: 21 Jan 2020 3:15 AM GMT)
உங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருந்தால் கவலையை விடுங்கள்… இதை மட்டும் செய்யுங்கள்… உங்கள் குழந்தையை நோய் நெருங்கவே நெருங்காது..
இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் குழந்தைகளுக்கு நோய்கள் வந்துவிடும். மழையில், நனைத்தால் மட்டும் அல்ல அதிகம் குளித்தால் கூட நோய் வந்துவிடும், நின்றால், நடந்தால் ஏன் பொத்தி பொத்தி வளர்க்கும் குழந்தைகளுக்கு கூட ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருக்கும். தினமும் மருந்து எடுத்து எடுத்தே பல தாய்மார்களுக்கு வெறுத்து போகும் இன்று அதற்கான தீர்வு பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
தொட்டதற்கெல்லாம் குழந்தைக்கு நோய் வருகிறதென்றால் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் அர்த்தம் . முதலில் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நெல்லிக்காயை எடுத்து இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தேனில் ஊற வைத்து விட்டு காலையில் அதை குழந்தைக்கு கொடுக்கலாம்,
அடுத்து தேங்காய் பாலில் உணவுகள் சமைத்து கொடுக்க வேண்டும். சிவப்பு கொய்யாப் பழம் கிடைத்தால் தினமும் ஒன்று வீதம் சாப்பிட கொடுக்கலாம். அதே போல் அவல். இது எல்லா இடங்களிலும் கிடைக்க கூடியது. அவலை வாங்கி வந்து தண்ணீரில் கழுவி சிறிது சீனி, தேங்காய் சேர்த்து சுவையாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
நெல்லிக்காய் சாப்பிடுவது சீக்கிரமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் குழந்தைகள் அதனை சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதனால் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து வடித்து சிறிது தேன் அல்லது நாட்டு கற்கண்டு சேர்த்து கொடுத்தால் குடிப்பார்கள்.
குழந்தைகளுக்கு கற்கண்டு பிடித்த ஒன்றாகும் எனவே அதனை சும்மா சாப்பிடவும் கொடுக்கலாம். முடிந்த அளவு தண்ணீர் ஜூஸ் போன்றவற்றை குழந்தைகள் குடிக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிவப்பரிசி உணவுகளை கொடுத்தால் கூட சீக்கிரம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்..!!
தொட்டதற்கெல்லாம் குழந்தைக்கு நோய் வருகிறதென்றால் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் அர்த்தம் . முதலில் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நெல்லிக்காயை எடுத்து இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தேனில் ஊற வைத்து விட்டு காலையில் அதை குழந்தைக்கு கொடுக்கலாம்,
அடுத்து தேங்காய் பாலில் உணவுகள் சமைத்து கொடுக்க வேண்டும். சிவப்பு கொய்யாப் பழம் கிடைத்தால் தினமும் ஒன்று வீதம் சாப்பிட கொடுக்கலாம். அதே போல் அவல். இது எல்லா இடங்களிலும் கிடைக்க கூடியது. அவலை வாங்கி வந்து தண்ணீரில் கழுவி சிறிது சீனி, தேங்காய் சேர்த்து சுவையாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
நெல்லிக்காய் சாப்பிடுவது சீக்கிரமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் குழந்தைகள் அதனை சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதனால் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து வடித்து சிறிது தேன் அல்லது நாட்டு கற்கண்டு சேர்த்து கொடுத்தால் குடிப்பார்கள்.
குழந்தைகளுக்கு கற்கண்டு பிடித்த ஒன்றாகும் எனவே அதனை சும்மா சாப்பிடவும் கொடுக்கலாம். முடிந்த அளவு தண்ணீர் ஜூஸ் போன்றவற்றை குழந்தைகள் குடிக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிவப்பரிசி உணவுகளை கொடுத்தால் கூட சீக்கிரம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்..!!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X