search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்
    X

    குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்

    பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். இது ஒரு சாதாரண விஷயமே! குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். தலையில் அதிகம் வியர்த்தால், குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, பெரும்பாலான பெற்றோர்கள் உடனே மருத்துவரிடம் சென்று நிற்பர்; ஆனால், இது ஒரு சாதாரண விஷயமே! தலை வியர்ப்பது என்பது, தலை போகிற விஷயமல்ல. குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழும். அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் உருவாகும்; வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்படும். வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் வியர்க்கிறது. குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கும்; குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று பொருள்.

    * குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்புகளாக இருக்கும்; பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும். அதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்க வைக்கவும்; குளித்தபின், தலையை நன்றாக துவட்டவும்; ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து விடவும்.

    * குழந்தைகளை தூங்க வைக்கும் போது, உடல், தலை என அனைத்து உடல் பாகங்களையும் போர்வையால், மூடிவிடக்கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.

    * முன்பே கூறியது போல், இனிப்பு மொட்டுக்களால் குழந்தையின் தலையில் அதிகம் வியர்வை ஏற்படும். ஆகையால், மாதத்திற்கு ஒருமுறை குழந்தையின் முடியை வெட்டிவிடவும் அல்லது மொட்டையடித்து விடவும். இது குழந்தைக்கு, காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

    அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் புழுக்கமான சூழ்நிலை இல்லாமல், மேற்கூறிய காரணங்கள் அன்றி குழந்தைக்கு அதிகம் வியர்த்தால், குழந்தைக்கு இருதய பாதிப்பாக இருக்கலாம். ஆகையால், உடனே மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. 
    Next Story
    ×