search icon
என் மலர்tooltip icon

    தலையங்கம்

    இது கட்டுப்பாடு அல்ல! தற்காத்து கொள்ள ஆலோசனை!
    X

    மருத்துவமனை வார்டு

    இது கட்டுப்பாடு அல்ல! தற்காத்து கொள்ள ஆலோசனை!

    • சில நேரங்களில் காற்றும் புயலாகி விடுவதை போல் காய்ச்சலும் விபரீதமாகி விடுகிறது.
    • தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நாம்தான் பின்பற்ற வேண்டும்.

    இயற்கையை தடுக்க முடியாது. ஆனால் அதில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்பார்கள். இயற்கை என்பது புயல், மழை என்பதையும் தாண்டி நோய்களும் அதில் இணைந்து இருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று என்பது மிகப்பெரிய இயற்கை பேரிடராக உலகையே தாக்கியது. அதில் இருந்து உலகம் மீண்டது. லட்சக்கணக்கானவர்களை வாரி சுருட்டி சென்றாலும் எஞ்சியவர்கள் மருந்து, முகக்கவசம் என்று சில வழிமுறைகளை கடைபிடித்து தற்காத்து கொண்டோம் என்பதே உண்மை.

    புயல், மழையை வானிலை முன்கூட்டியே முன் எச்சரிக்கை செய்யும். அதேபோல் இனி மருத்துவ உலகம் அவ்வப்போது அறிவிக்கும் முன்னெச்சரிக்கைகளை கண்டிப்பாக கடைபிடித்தே ஆகவேண்டிய சூழல். தவறினால் அதற்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.

    இப்போது ஒரு புதிய எச்சரிக்கையை சுகாதாரத்துறை விடுத்துள்ளது. காய்ச்சல் என்பது சாதாரணமாக எல்லோரும் சந்திக்கும் நோய்தான். சில நேரங்களில் காற்றும் புயலாகி விடுவதை போல் காய்ச்சலும் விபரீதமாகி விடுகிறது.

    அந்த வகையில் காய்ச்சலில் புளூ காய்ச்சல் காலநிலை காய்ச்சலாக இருந்தாலும் அது பரவும் தன்மை கொண்டது. இருமல், தும்மல் ஏற்படும்போது காற்றில் வைரஸ் பரவுகிறது. எனவே காய்ச்சல் அறிகுறி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.

    பண்டிகை காலம் வேறு வருகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளனர்.

    இது ஏற்கனவே கொரோனா காலத்தில் நாம் கடைபிடித்த பழக்கம்தான். எனவே இதை கடைப்பிடிப்பது சிரமமானது அல்ல.

    காய்ச்சலோடு கொரோனாவும் சற்று அதிகரித்துள்ளது. தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ள சென்னையில் 16 சமுதாய நலக்கூடங்களும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    அரசு உதவி செய்யும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டியது நம் கைகளில்தான் உள்ளது.

    தொற்று ஏற்படலாம் என்று அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் நாம்தான் பின்பற்ற வேண்டும்.

    இயற்கை அச்சுறுத்தல் என்பது எப்படி எந்நேரமும் வரலாம் என்பதை போல் இனிமேல் இந்த மாதிரி தொற்றுக்களும் எந்நேரமும் வரலாம்.

    வைரசில் உருமாற்றம் ஏற்படுவது போல் நோயிலும் அதன் தாக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். எந்த சூழலிலும் அதனிடம் இருந்து நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    சளி, காய்ச்சல் இருந்தால் சுய சிகிச்சை மேற்கொள்ளாதீர்கள். மருத்துவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    காலம் மாறிவிட்டது. அதற்கேற்ப நாமும் நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    Next Story
    ×