search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் அருகே கூவத்தில் உள்ள திரிபுர சுந்தரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    திருவள்ளூர் அருகே கூவத்தில் உள்ள திரிபுர சுந்தரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ளது திரிபுர சுந்தரி கோவில்.
    • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் :

    கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ள திரிபுர சுந்தரி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 4-ந்தேதி சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    நேற்றுகாலை விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து மாலை மூன்றாம் கால யாக பூஜை ஹோமம், நாடி சந்தானம், மற்றும் தீபாராதனையும் நடை பெற்றது. இன்று காலை திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பி.ஜி.பிரபாகரன், இணை ஆணையர் சி.லட்சுமணன், கோயில் தக்கார் எம்.டில்லிபாபு, மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×