என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரம்மோற்சவ விழா பராமரிப்பு பணிக்காக திருப்பதி கோவில் தெப்பக்குளம் ஒரு மாதம் மூடல்
    X

    பிரம்மோற்சவ விழா பராமரிப்பு பணிக்காக திருப்பதி கோவில் தெப்பக்குளம் ஒரு மாதம் மூடல்

    • ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மூடப்பட உள்ளது.
    • திருக்குள ஆராத்தி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தையொட்டி தெப்பகுளத்தில் உள்ள தண்ணீர் அகற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இதனையொட்டி இந்த ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருக்குளம் பராமரிப்பு பணிகளுக்காக முதல் 10 நாள் தண்ணீர் முழுவதும் அகற்றப்படும். அதன் பிறகு சீரமைப்பு பணிகள் நடைபெறும்.

    ஒரு மாதம் மூடுப்படுவதால் இதனால் திருக்குள ஆராத்தி ரத்து செய்யப்பட்டுள்ளது. தெப்பகுளத்தில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த ஒரு சிறந்த மறுசுழற்சி அமைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது.

    இதனால் குறிப்பிட்ட அளவு நீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 73,137 பேர் தரிசனம் செய்தனர். 27,490.பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×