என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தெப்போற்சவம் 3-ந்தேதி தொடக்கம்: இன்று ராமநவமி விழா
- ராமநவமி விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- தெப்போற்சவம் 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) ராமநவமி விழா தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமச்சந்திரமூர்த்திக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 3 மணிக்கு ராமநவமி ஆஸ்தானம், இரவு 7.00 மணிக்கு ராமர், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை முத்து மாலைகள் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருந்து கோவிலுக்கு யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சீதா-ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது.
நாளை மறுநாள் ஏப்ரல் 1-ந்தேதி காலை 8 மணிக்கு திருப்பதியில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் இருந்து கோவில் வரை மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ராமருக்கு சதுர்தஷ கலச திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தங்கத்3-ந்தேதி திருச்சி வாகனத்தில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோவிலில் தெப்போற்சவம் வருகிற 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி அங்குள்ள ராமச்சந்திர புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்