search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 30-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
    X

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 30-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

    • 29-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை மற்றும் உற்சவங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகிற தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதம் (பவித்ரம்) பாதிக்கப்படாமலும் இருக்க வேவேண்டி சாஸ்திர முறைப்படி ஆண்டுக்கொரு முறை பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதற்காக 29-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    முதல் நாளான வருகிற 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலச பூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 2-வது நாளான ஜூலை மாதம் 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ர சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 3-வது நாளான ஜூலை மாதம் 2-ந்தேதி காலை மகாபூர்ணாஹுதி, கலசோற்வாசனம், பவித்ர சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது.

    Next Story
    ×