என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
அக்டோபர் மாதம் வரை மாற்றுத்திறனாளிகள், முதியோர் வருவதை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
- புரட்டாசி மாதம் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்கி அக்டோபர் 17-ந்தேதி முடிவடைகிறது.
- முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வார இறுதி நாட்கள் கூட்டமும், திருவிழாவும் வருகிற 19-ந்தேதி வரை நீடிக்கும். மேலும் புனித மாதமான புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17-ந் தேதி முடிவடைகிறது.
இந்த நேரத்தில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே முதியோர்கள், மாற்றுத்திறனா்ளிகள், சிறுகுழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் தயாராக வந்து தரிசனத்திற்கான முறை வரும் வரை கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்