search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூரில் இன்று நடக்கும் பஞ்சமி தீர்த்தத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
    X

    திருச்சானூரில் இன்று நடக்கும் பஞ்சமி தீர்த்தத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

    • லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று (திங்ட்கிழமை) காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி காலை 11.40 மணியில் இருந்து பகல் 11.50 மணி வரை நடக்கிறது.

    அதில் லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சானூரில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தை சிரமமின்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதில் பக்தர்கள் ஓய்வெடுத்ததுப் போக மீதி உள்ள பக்தர்களுக்கு திருச்சானூர் அய்யப்பன் கோவில், ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, புடி ரோடு ஆகிய இடங்களிலும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கு பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தேநீர், காபி ஆகியவை வழங்கப்படும். பக்தர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

    திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரம் அனுப்பி வைக்கப்படும். பட்டு வஸ்திர ஊர்வலம் பாதுகாப்பாக நடத்தப்படும்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் வெளியே புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடப்பதால், அதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    ஜெர்மன் ஷெட்டுகளில் இருந்து பக்தர்கள் புஷ்கரணிக்குச் செல்ல சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புஷ்கரணிக்குச் சென்று புனித நீராட வசதியாக உள்ளே செல்லும் வழி, நீராடி விட்டு புஷ்கரணியில் இருந்து வெளியே போகும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 500 போலீசாரும், இதுதவிர திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேவஸ்தான ஊழியர்களுடன் 1000 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு சேவைகளை செய்வார்கள். பக்தர்கள் அனைவரும் பொறுமை காத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து புஷ்கரணியில் புனித நீராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×