search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 20-ந்தேதி கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
    X

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 20-ந்தேதி கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

    • 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை விவரங்கள் வருமாறு:-

    20-ந்தேதி காலை கொடியேற்றம், இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை முத்து பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமன் வாகன வீதிஉலா, 24 -ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா.

    25-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வாகன வீதிஉலா, 28-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கொரோனா பரவலால் கோவில் உள்ளே நடந்த வாகனச் சேவை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு மாடவீதிகளில் நடப்பதால் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×