search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை

    • வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
    • நாளை ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். முன்பு மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம், அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவிலில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் மணியக்காரர் உடையவர் ஸ்ரீதர், அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து, மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னா் வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியான நாளை(திங்கட்கிழமை) திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.

    Next Story
    ×