என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சிறுவாபுரி முருகன் கோவிலில் 21-ந்தேதி கும்பாபிஷேகம்
- கும்பாபிஷே நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.
- கோவிலை சுற்றி உள்ள 100 கடைகள் தற்காலிகமாக அகற்ற உத்தரவு.
பொன்னேரி :
பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை, வாகன நிறுத்தும் வசதி, பக்தர்கள் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூ மாலை, தேங்காய், பழம், காய்கறிகள் கடைகள் உள்ளன. இதனால் கும்பாபிஷேம் நடைபெறும் நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.
இதையடுத்து கோவிலில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவிலை சுற்றி உள்ள கடைகளை தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி கோவில் வியாபாரிகள், கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆகியோருடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ரஜினிகாந்த், செயல் அலுவலர் செந்தில் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா முடியும் வரை கோவிலை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை தாமாக அகற்றி விடுவதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்