search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வளர்பிறை சஷ்டி: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    வளர்பிறை சஷ்டி: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் ஒரு பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் கோவில் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வளர்பிறை சஷ்டி என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலில் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பொது தரிசன வரிசையில் சென்று தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், ரூ. 100 கட்டணம் தரிசன வரிசையில் நின்று தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×