search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்)

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினசரி இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.
    • ஆடிப்பூர விழா 22-ந் தேதி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பெரியநாயகி அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு, விழாக்கான கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. மேலும் இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×