search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வெள்ளாங்கோவில் பல்லி மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    வெள்ளாங்கோவில் பல்லி மாரியம்மன் கோவில் திருவிழா

    • இந்த கோவில் திருவிழா நவம்பர் 2-ந்தேதி, 3-ந் தேதி நடக்கிறது.
    • 3-ந்தேதி இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

    கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பழமையான பல்லி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி (புதன்கிழமை), 3-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் பூச்சாட்டப்பட்டது.

    அடுத்த மாதம் 1-ந் தேதி பகல் 3 மணி அளவில் பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வருகிறார்கள். இரவு 7 மணி அளவில் அலங்கார பூஜையும், 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

    இதேபோல் மறுநாள் 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பொங்கல் வைத்தலும், காலை 5 மணிக்கு தண்டனிடுதலும், 6 மணிக்கு கிடாய் வெட்டுதலும் நடைபெறுகிறது. 3-ந்தேதி இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 4-ந் தேதி பகல் 12 மணிக்கு மறுபூஜையும் நடைபெறுகிறது.

    30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்துகொள்ளும் இந்த விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வி.கே.துரைசாமி, வி.எம்.செங்கோட்டையன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×