search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்
    X

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்

    • ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    தமிழ் மாதமான மார்கழி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிறந்து, அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கின்றது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×