search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குமரி மாவட்டத்தில் இன்று கோவிந்தா... கோபாலா... பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் தொடங்கியது
    X

    குமரி மாவட்டத்தில் இன்று கோவிந்தா... கோபாலா... பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் தொடங்கியது

    • இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
    • 12 சிவாலயங்களில் பக்தர்கள் ஓடி தரிசனம்

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் உள்ளது. சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் ஓடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

    சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினம் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். விரத நாள்களில் தீயி னால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருந்து வருகிறார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிட்டு காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி ஈரத்துணியுடன் சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.

    சிவராத்திரி விழா நாளை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிவால யங்களுக்கு ஓடி சென்று தரிசனம் செய்வார்கள். திருமலை மகாதேவர் கோவி லில் இருந்து சிவாலய ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் 12-வது சிவாலயமான நட்டாலம் மகாதேவர் கோவிலில் தங்களது ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். 112 கிலோமீட்டர் தூரம் ஒடியே சென்று பக்தர் கள் தரிசனம் செய்வார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை இன்று 17-ந்தேதி காலை தொடங்கினார்கள்.காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை திப்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நாளை மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவி லில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை யொட்டி நாளை 18-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×