என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சிறுவாபுரி முருகன் கோவிலில் 20-ந்தேதி வரை முருகரை தரிசிக்க முடியாது: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
- செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
- இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
பொன்னேரி அடுத்த சின்னம்பேடு, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து செல்வது வழக்கம். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர்களில் இருந்தும் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமிதரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன்.
இந்த நிலையில் கும்பாபிஷேக விழா பணியையொட்டி கோவில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வருகின்ற 20-ந்தேதி வரை மூலவரை தரிசிக்க இயலாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்