search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி
    X

    சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி

    • 26-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
    • ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னேற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து காரையாறு வரை 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியார் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பொருட்களை கோவிலில் இறக்கி வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்த பின்னர் இரவில் தங்காமல் வாகனங்களில் கீழே இறங்கி வந்து விட வேண்டும். கோவிலில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.

    மேலும் ஏற்கனவே அறிவித்தது போன்று நாளை (திங்கட்கிழமை) பக்தர்கள் தனியார் வாகனங்களில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. தனியார் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் விட்டு விட்டு, அரசு பஸ்களின் மூலமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×