search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 30-ந்தேதி சூரசம்ஹாரம்
    X

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 30-ந்தேதி சூரசம்ஹாரம்

    • விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
    • 31-ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி கந்தசஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சூரசம்ஹார விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் 45-வது ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் மகாகணபதி ஹோமமும், 6 மணிக்கு கால்நாட்டும், காப்புக்கட்டும் நடந்தது.

    9 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி மூலவரையும், அம்பாளையும் இறை இசைப்பாடல்களுடன் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று காலை 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 6-வது நாளான வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நாகராஜா திடலில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சாமி ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-வது நாளான 31-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மங்கல தீபாராதனையும், தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது.

    Next Story
    ×