search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கந்தசஷ்டி விழா: நாளை மருதமலை கோவில் மலைபாதையில் வாகனங்களில் வர அனுமதியில்லை
    X

    கந்தசஷ்டி விழா: நாளை மருதமலை கோவில் மலைபாதையில் வாகனங்களில் வர அனுமதியில்லை

    • சூரசம்ஹாரம் விழாவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 31-ந்தேதி சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கந்தசஷ்டி விழாயொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி, பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா காலத்திற்கு பிறகு வரும் கந்தசஷ்டி விழா என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் சூரசம்ஹாரம் விழாவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், மலை கோவிலுக்கு செல்ல 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக அடிவாரத்தில் பக்தர்கள் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் மலைக்கோவில் செல்ல தேவையான அளவிற்கு மினி பஸ்கள் இயக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    31-ந் தேதி சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் அன்று வழக்கம்போல வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×