என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநகரிகல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    திருநகரிகல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    • தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் இரணிய நரசிம்மர்களுக்கு தனி சன்னதி இந்த கோவிலில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கடந்த வாரம் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி கல்யாண ரெங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் பக்தர்களால் தேருக்கு எடுத்து வரப்பட்டனர். இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டு, தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஆய்வர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், விழாகுழு செயலாளர் ரகுநாதன், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×