search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிய மாலை, மதுரை புறப்பட்டது
    X

    ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிய மாலை, மதுரை புறப்பட்டது

    • நாளை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • கள்ளழகருக்கு அணிவிக்கும் மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வைணவ திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமானது. வருடந்தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்து கொடுக்கும் மாலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும்.

    அதன் பிறகு கருட சேவை நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெறும். அதேபோல சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் இறங்கும்போதும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கொண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்குவார்.

    அந்த வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை மதுரைக்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.

    இதற்காக நேற்று மதியம் 2 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு பூஜைகள் நடைபெற்றன. கள்ளழகருக்கு அணிவிக்கும் மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பூஜையில் விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் கலந்து கொண்டர். அதன் பிறகு கோவில் பட்டர்கள், ஸ்தானியர்கள் ஊர்வலமாக யானை முன் செல்ல மாட வீதிகள் வழியாக மாலையை எடுத்து வந்தனர். பின்பு அந்த மாலையை மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×