என் மலர்
வழிபாடு

கால் நாட்டு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் ஜனவரி 26-ந்தேதி கும்பாபிஷேகம்
- கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
- கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி ஜூலை மாதமும், பாலாலயம் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14-ந் தேதிகளில் நடந்தது.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு கோவிலை சுற்றி பார்த்து கோவில் பராமரிப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்த ரூ.1 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜனவரி மாதம் 26-ந்தேதி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 7.30 மணி அளவில் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.
இதற்கான பூஜைகளை தந்திரிகள் கே.ஜி.எஸ்.மணி நம்பியார், சிவசுப்பிரமணியம் நம்பியார் ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் நயினார், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயதாரர்கள் நாகமணி, நாகராஜன் பக்தர் சங்கத்தை சேர்ந்த பாக்கியம் பிள்ளை, ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






