search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் பயன்
    X

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் பயன்

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்றடைவதாக ஐதீகம்.
    • முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு ஆடி அமாவாசை சிறந்த நாள்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இன்று ஏராளமானோர் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் குவிந்துள்ளனர்.

    தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்றடைவதாக ஐதீகம். எனவே நீர்நிலைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக பித்ருக்களை சென்றடையும்.

    இதன்படி நடப்பு ஆண்டு ஆடி அமாவாசை நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் கடற்கரை ஒரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் குவிந்துள்ளனர்.

    முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு அமாவாசை சிறந்த நாள் அதிலும் ஆடி அமாவாசை நாளில் புண்ணிய ஸ்தலங்களுக்கு நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஆடி அமாவாசை தினத்தில் பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    ஒருவரது குடும்பத்தில் தீராத நோய்கள் இருக்கும், பிள்ளைகளுக்கு திருமணத்தடை ஏற்படும், எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போகும், கடன் பிரச்சினை அதிகமாகும். கணவன்- மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சண்டை சச்சரவு என தினம் தினம் குருச்ஷேத்திர போர்க்களமாக வீடு இருக்கும். இதற்கு காரணம் மறைந்த முன்னோர்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.

    Next Story
    ×