search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலய அர்ச்சிப்பு விழா நாளை மறுநாள் நடக்கிறது
    X

    கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலய அர்ச்சிப்பு விழா நாளை மறுநாள் நடக்கிறது

    • அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது.
    • 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையில் புனித பர்த்தலோமையார் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு பால் காய்ச்சுதல், மாலை 5 மணிக்கு கொடிமரம் மற்றும் புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

    இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது. விழாவையொட்டி 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    15-ந் தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல், 10 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×