search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆணவம், அகந்தையை அழிக்கும் பலிபீடம்
    X

    ஆணவம், அகந்தையை அழிக்கும் பலிபீடம்

    • தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடம் பலிபீடம்.
    • சித்திரை , மார்ச் மாதத்தில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது.

    ஆதி சக்தி அம்மன் தன் அம்சமான தாட்சாயணி தேவியாக தட்சனுக்கு மகளாக பிறந்தாள் என்றும் ஆணவத்தின் அகங்காரத்தின் தலைக்கணத்தின், இறுமாப்பின், திமிரின் உச்சக்கட்டமாக தக்கனை ஒப்பிடுகையில் அத்தக்கனின் முழு உருவத்தை ஆடாக உருவப்படுத்தியும், அதே முறையில் ஆணவம், அகங்காரம், தலைக்கனம், திமிர் இறுமாப்பின் அனைத்து நிலை உருவமாக சூரபது மனை உருவகப் படுத்தும்போது சூரபதுமன் ஒரு பாதி மயிலாகவும், ஒரு பாதி சேவலாகவும் நின்றது அறிந்ததே!

    இவ்வகையில் அகந்தை, அகங்காரம், திமிர், தலைக்கணம், ஆணவத்தின் தோற்ற உருவாக கோழியையுமே பலியிட்டு வணங்கி இருக்கின்றனர்.

    ஆடு, கோழியின் உருவமான தட்சன், சூரபதுமன் போன்ற அரக்க செயல் கொண்ட ஆணவம், அகந்தை, திமிர், தலைக்கணம், இறுமாப்பு போன்ற தீய குணங்களை திருக்கோவிலின் பலிபீடத்தில் பலியிட்டு வழிபாட்டை தொடங்க கோவிலுக்கு உள்ளே தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடமே பலிபீடம் ஆகும்.

    ஆனால் வழிபாட்டில் தவறான கருத்தாக ஆடு, கோழியைப் பலியிடும் இடமாகவே கருதப்படுவதாகவே ஆதி முதல் பலிபீடம் இருந்ததாகவே! தவறான கருத்தாக கொள்ளப்பட்டு இருந்தது.

    பலிபீடம் என்பது, தக்கன், சூரபதுமன் என்ற மகா அரக்கர்களின் குணநலன்கள் எந்த ஒரு குடும்பத்தாரையும் அடையாமல் இருக்கவும் குடும்ப நபரை அடைந்த அந்த குணநலன்களையும், வழிபாட்டுக்கு முன்பாகவே பலி பீடத்தில் பலியிட்ட பின்னரே வழிபட செல்வதாகவே படைக்கப்பட்ட இடமே திருக்கோவில் பலிபீடம் என்பது தெளிவாக உள்ளது.

    ஊரை சுற்றி வரும் சக்தி கரகத்தின் சிறப்பு

    அங்காளபரமேஸ்வரி கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    அங்காளபரமேஸ்வரி சக்தி கரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்க்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கட்டை தானியம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள்.

    ஏன் என்றால் அங்காளம்மன் பித்து பிடித்த தனது கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவானது.

    சக்தி கரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

    Next Story
    ×