search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுக்கு பிறகு அன்னாபிஷேகம்
    X

    சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுக்கு பிறகு அன்னாபிஷேகம்

    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களுக்கும் சிவ பெருமான் உணவு அளித்து காப்பதற்கு அடையாளமாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் அகத்தீஸ்வரர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடை பெறாமல் இருந்தது. எனவே அன்னாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி நேற்று சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவர் காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இரவு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் உள் ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    20 ஆண்டுக்கு பிறகு அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×