search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
    X

    வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

    • சென்னை வானகரத்தில் உள்ளது ஸ்ரீ மச்சக்கார சுவாமி நாத பாலமுருகன் கோவில்.
    • நாளை (சனிக்கிழமை) முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது.

    சென்னை வானகரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மச்சக் கார சுவாமி நாத பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந் தோறும் கிருத்திகை அன்று பரிகாரம் செய்தால் பேச்சு வராத குழந்தைகளுக்கு குருஜியின் திருக்கரத்தால் நாவில் ஓம் என்ற அட்சரம் எழுதினால் சில மாதங்களில் அந்த குழந்தை பேசும் சக்தியை பெறுகிறது.

    இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கிருத்திகை அன்று ஏராளமான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து முருகனின் அருள் பெற்று செல்கிறார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க மச்சக்கார பால முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை சனிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு 108 பால்குட விழா நடக்கிறது.

    விழாவில் முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×