search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 14-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது

    தென் திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நாளை(வியாழக்கிழமை) காலையில் 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் இக்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்குகிறது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    இதைதொடர்ந்து 5-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெறும். 6-ந் தேதி மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7-ந் தேதி மாலையில் கருட வாகனத்தில் புறப்பாடு, 8-ந் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருள்கிறார். மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    9-ந் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 11-ந் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார்.

    இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும். இரவு பூப்பல்லக்கு விழா 13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×