search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி அமாவாசை: சதுரகிரியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
    X

    ஆடி அமாவாசை: சதுரகிரியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

    • இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.
    • பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமா வாசை பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா குறைந்ததையடுத்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த 25-ந்தேதி முதல் இன்று (30-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், குழந்தைகள் என 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

    கடந்த 27-ந்தேதி முதல் சதுரகிரி மலை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் மலை பாதைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மீட்டனர். மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் சதுகிரிக்கு மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.

    அடிவாரத்தில் குவிந்திருந்த பக்தர்களின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டு தாணிப்பாறை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×