என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதியில் இலவச தரிசன வரிசைக்கு செல்ல 5 கி.மீ. நடந்து செல்லும் பக்தர்கள்
- கோவிலை சுற்றி இலவச தரிசன பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டு இருந்தது.
- குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.
திருமலை பாலாஜி பஸ் நிலையத்திலிருந்து சீலா தோரணம் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் செல்ல வேண்டும் என்றால் அங்கு தான் செல்ல வேண்டும். இதனால் சுமார் 5 கி.மீ. தூரம் மலையை சுற்றிக்கொண்டு பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.
குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.
சில தனியார் வாகனங்கள் அங்கு செல்கிறது. அவர்கள் பக்தர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இலவச தரிசன செல்லும் வரிசையை அடையவே 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு சுமார் 5 கி.மீ. தூரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தரிசனம் செய்யவும் சுமார் 40 மணி நேரம் ஆகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
ஏற்கனவே கோவிலை சுற்றி இலவச தரிசன பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள சீலா தோரணம் தரிசன வரிசை அமைக்கப்பட்டு உள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே இலவச தரிசன வரிசையில் மீண்டும் பழையபடி மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையை (தரிசன நேரம் குறித்த டோக்கன்) ஏற்படுத்தி கொடுத்தால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதிப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து தரிசனம் செய்து கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்