search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா
    X
    தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா

    தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு

    வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா கடந்த 20-ந் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி-கல்யாணசுந்தரர் எழுந்தருளினர்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் தெப்பம் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.

    இதில் பூண்டி கே. கலைவாணனன் எம்.எல்.ஏ., நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்திட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×