என் மலர்
வழிபாடு

வேணுகோபால சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
வேணுகோபால சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
வேணுகோபால சுவாமி கோவில் தேரை மறு சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான மிகப் பழமையான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் 1952-ம் ஆண்டு கட்டப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளில் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் இந்த தேர் பழுதடைந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதனால் பக்தர்கள் மீண்டும் தேரோட்டம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்தநிலையில் கிராம மக்களின் கூட்டு முயற்சியாலும், ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் ஒத்துழைப்பாலும் கடந்த 4 ஆண்டுகளாக ஓடாமல் பழுதடைந்து நின்ற தேரை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த திருத்தேர் ஸ்தபதி சுதாகர் குழுவினர் தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருத்தேர் ஸ்தபதி சுதாகர் கூறுகையில்:-
70 ஆண்டுகள் பழமையான இந்த தேரில் மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய பல்வேறு சிற்பங்கள் மற்றும் 4 பிரம்மாண்டமான இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பல்வேறு கலை நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தேரை மறு சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர் பணிகள் முடிவடைந்து மீண்டும் தேரோட்டத்ைத விரைவில் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையடுத்து ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளில் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் இந்த தேர் பழுதடைந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதனால் பக்தர்கள் மீண்டும் தேரோட்டம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்தநிலையில் கிராம மக்களின் கூட்டு முயற்சியாலும், ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் ஒத்துழைப்பாலும் கடந்த 4 ஆண்டுகளாக ஓடாமல் பழுதடைந்து நின்ற தேரை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த திருத்தேர் ஸ்தபதி சுதாகர் குழுவினர் தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருத்தேர் ஸ்தபதி சுதாகர் கூறுகையில்:-
70 ஆண்டுகள் பழமையான இந்த தேரில் மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய பல்வேறு சிற்பங்கள் மற்றும் 4 பிரம்மாண்டமான இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பல்வேறு கலை நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தேரை மறு சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர் பணிகள் முடிவடைந்து மீண்டும் தேரோட்டத்ைத விரைவில் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story






