என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை
Byமாலை மலர்17 May 2022 5:27 AM GMT (Updated: 17 May 2022 5:27 AM GMT)
கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடந்தது.
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. வைகாசி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
தொடர்ந்து முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருட்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும், 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடந்தது. முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் பாடினர். பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருட்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும், 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடந்தது. முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் பாடினர். பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X