என் மலர்
வழிபாடு

திருத்தணி முருகன் கோவில்
பிரம்மோற்சவ விழா: திருத்தணி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 5ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் வெவ்வேறு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 7வது நாளான நேற்று மரத்தேரோட்டம் கோயில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த மரத் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா.. அரோகரா.. என்ற கோஷம் எழுப்பினர்.
சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் யாளிவாகனத்தில் காட்சியளித்தார். மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இதைத்தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
இதில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் வெவ்வேறு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 7வது நாளான நேற்று மரத்தேரோட்டம் கோயில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த மரத் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா.. அரோகரா.. என்ற கோஷம் எழுப்பினர்.
சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் யாளிவாகனத்தில் காட்சியளித்தார். மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இதைத்தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story






